வசதிகளை அதிகரிக்கிறது தென்னக ரயில்வே
பெங்களூர்:
மைசூர் - சென்னை, மைசூர் காவேரி ரயிலில் பெங்களூர் - சென்னைக்கிடையே இடையே புதிதாக படுக்கை வசதிகொண்ட பெட்டி ஒன்றை இணைக்கத் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட இந்தப் பெட்டி பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பெங்களூரிலிருந்தும், சென்னையிலிருந்து23-ம் தேதியன்றும் புதிதாக இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 6221 / 6222) 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இதில்ஒரு இரண்டு அடுக்கு கொண்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டியும், இரண்டு பொது பெட்டிகள், இரண்டுஇரண்டாம் வகுப்பு பெட்டியில் சரக்குகள் வைக்கும் வசதியுடன் ஒரு பெட்டியும் இணைக்கப்படும்.
சென்னை- மைசூர் மற்றும் பெங்களூர் -சென்னை மார்க்கத்தில் இரண்டு அடுக்கு கொண்ட குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட பெட்டி ஒன்றும், இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்படும்.
ரயில் எண் 236/ 235 பெங்களூர்- மைசூர், மைசூர்- பெங்களூர் ரயிலும், வண்டி எண் 271 /2 72 பெங்களூர் - சேலம்ரயிலிலும் தற்போது இருக்கும் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுஅதற்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications