காங்கிரஸ்--த.மா.கா. இணைந்து போட்டி
சென்னை:
காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரசும் இணைந்து தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைவர் ஜெயலிதாதவுடனும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்மூப்பனாருடன் பேசவும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பிரணாப்முகர்ஜியுடன், பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தும் திங்கள் கிழமை சென்னைவந்தனர்.
அவர்கள் மூப்பனாரை சந்தித்து பேசிய பின் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தல்கூட்டணி குறித்து பேசினார்கள். பேச்சு வார்த்தையின் விவரம் குறித்து கேட்ட போதுபேச்சு வார்த்தைகுறித்து சோனியாவிடம் கூறுவோம், கட்சி தலைமை முடிவு செய்யும்என கூறினர்.
டெல்லி திரும்பிய முகர்ஜியும், ஆசாத்தும் சோனியா காந்தியிடம் தங்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆசாத்,காங்கிரசும், த,மா.காவும் இணைந்து தமிழக தேர்தலில் போட்டியிட உள்ளன.
தேர்தல் கூட்டணி குறித்து ஜெயலலிதாவுடன் பேசியதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்எதுவும் இல்லை என கூறினார்.
காங்கிரஸ்-த.மா.கா இரண்டும் கூட்டு சேர்ந்து அதிமுக கூட்டணியில் சேர்ந்துபோட்டியிட வாய்ப்புள்ளது.
யு.என்.ஐ.