For Daily Alerts
Just In
கேரளாவில் இன்றும் நிலநடுக்கம்
கொல்லம்:
கேரள மாநிம் கொல்லம் மாவட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மசூதி உள்பட 70கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கொல்லத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு லேசானநிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொல்லத்தில் உள்ள மக்கடா என்ற இடத்தில் மசூதி ஒன்று திறக்கப்பட்டது. இந்தமசூதியில் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டது என்றனர்.
கொல்லம் மாவட்டம் காட்டின்கடவில் 35 க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பலநாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ
Comments
Story first published: Wednesday, February 21, 2001, 5:30 [IST]