திருச்சியில் உலக வர்த்தக அமைப்பு கருத்தரங்கம்
திருச்சி:
உலக வர்த்தக அமைப்பான டபிள்யூ.டி.ஓ.வின் 2 நாள் கருத்தரங்கை திருச்சியில் பிப்ரவரி 23ம்தேதி சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்தொடங்கி வைக்கிறார்.
கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை. ஜான் பிரிட்டோ திருச்சியில் கருத்தரங்கு குறித்து நிருபர்களுடன்பேசும் போது,
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களும், அதனால் ஏற்படும் சவால்களும் என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில் 200 வல்லுநர்கள் வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிஇக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
உலக வர்த்தக அமைப்பு பற்றி கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொருளாதாரத்துறை நிபுணர்கள் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைப்பைஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கம் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.