அரசியல் பண்பாடு எங்கே?: பா.ஜ.கவுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி
பாண்டிச்சேரி:
பா.ஜ.க. தொண்டர்கள் பண்பாடற்ற அரசியலில் ஈடுபட்டு, புயல் நிவாரண நிதிவழங்கும் விழாவில் பிரச்சனைகளை உருவாக்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசிய கவுன்சில் உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயல் நிவாரண நிதி வழங்கும் விழாவில் பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர்கிருஷ்ணமூர்த்தி தாக்கப்படுவதாக சொல்லப்படுவது தவறான செய்தி.பா.ஜ.க.வினர்தான் அந்த விழாவில் ரகசிய நோக்கத்துடன் பிரச்சனையைஉருவாக்கினார்கள் என்றார்.
இந்த சம்பவம் குறித்து 7 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்றுபட்ட ஜனதாதளம் இந்த சம்பவம் குறித்து ஒரு நபர்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர்ரஜினிராயை கேட்டுக் கொண்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications