பிந்த்ராவிற்கு தடை: கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் பிந்த்ரா இரண்டாண்டுகள் வாரியத்தின்பதவிகளுக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக வாரியத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மீதுநடவடிக்கை எடுப்பதற்காக சென்னையில் கூடிய வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறுமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவருடைய விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் இந்த நடவடிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் இனிமேல் வாரியத்தை பற்றிவிமர்சிக்கவில்லை என்றும் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications