மிளகாய்ப்பொடி தூவி திருடர்களை விரட்டிய வீரப்பெண்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
முறத்தால் புலியை விரட்டிய சங்ககால தமிழ்ப்பெண் போல் மிளகாய்ப்பொடி தூவி வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார் நவீன காலதமிழ்ப்பெண் ஒருவர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு கே.கே.நகரில் குடியிருக்கும் ஆசிரியை கீதா என்பவரின் வீட்டின் கதவை நள்ளிரவில் அம்மிக்கல்லை கொண்டு உடைக்கமுயன்றனர்.
ஜன்னல் கண்ணாடியை உடைத்து கத்தியுடன் நுழைய முயன்ற மூன்று கொள்ளையர்களை கண்டு முதலில் மிரண்ட ஆசிரியை பின்னர் சுதாரித்து மிளகாய்ப்பொடியை எடுத்துகொள்ளையர்களின் கண்களில் தூவியுள்ளார்.
அந்த நேரத்தில் ரோந்து வநத் போலீசாரைக்கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்ட டி.ஐ.ஜி. சி.வி.ராவ், ஆசிரியை கீதாவை பாராட்டியதோடு அவருடைய தைரியத்ப்ை பாராட்டி 500 ரூபாய் பரிசளித்தார்.












Click it and Unblock the Notifications