ஜெ. தேர்தலில் நிற்கலாம்: அ.தி.மு.க எம்.பி சொல்கிறார்
திருச்சி:
ஜெயலலிதாவிற்கு கீழ்நீதிமன்றம் அளித்த 2ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்துள்ளதால் புரட்சித்தலைவி ஜெயலலிதாதேர்தலில் நிற்கலாம் என அதிமுக எம்.பி.யும், தமிழக முன்னாள் தேர்தல் ஆணையருமான மலைச்சாமி எம்.பி கூறினார்.
திருச்சியில் துவங்கிய திருச்சி மாநகர், புறநகர், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பயிற்சி முகாமில் பேசிய மலைச்சாமி எம்.பி,
மின்னணு வாக்குபதிவை எதிர்த்து புரட்சித்தலைவி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் அளிக்கும் முடிவை ஏற்போம்.
வாக்குசாவடிகளில் தேர்தல் கமிஷன் முடிவுப்படி முதலில் அதிமுக பூத் ஏஜென்ட்கள் அமரவேண்டும். மேலும், அவர்கள், மற்ற பூத் ஏஜென்ட்கள் தரும்பானங்களையோ, உணவுபதார்த்தங்களையோ பெறக்கூடாது. ஏனெனில், அதில் எதையாவது கலந்து இருக்கலாம்.
வரும் தேர்தலில் புரட்சித்தலைவி போட்டியிடுவதில் பிரச்சனை இல்லை. ஏனெனில், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடுசெய்திருப்பதால், தேர்தலில் நிற்பதில் தடையில்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications