ஊழல் வேண்டுமா? நாங்கள் வேண்டுமா? கருணாநிதி கேள்வி
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், முன்னேற்றம் வேண்டுமா?அல்லது ஊழல்வேண்டுமா ?என்பதையே மக்கள் முன் கேள்வியாகவும், பிச்சாரமாகவும் வைக்கஉள்ளோம் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறினார்.
தி.மு.க.வின் மேடைப் பேச்சாளர்களுக்கான கூட்டத்தில் பேசிய பின் கருணாநிதிநிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்கள் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல முன்னேற்ற திட்டங்களைசெயல்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஊழலின் முழு உருவம். அவர் முதல்வராகஇருந்தபோது மாநில முன்னேற்றத்திற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாகஅவர் முன்னேற்றத்திற்கு தடையாகத்தான் இருந்தார்.
மக்கள் முன் இப்போதுள்ள கேள்வி அவர்களுக்கு தேவை முன்னேற்றம் கொடுக்கும்அரசா இல்லை ஊழல் அரசா என்பதுதான். கட்சி மேடை பேச்சாளர்களைகண்ணியமான முறையில் பேசுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன் என்றார்.
அ.தி.மு.க. அணியை விட்டு விலகி காங்கிரஸ் வந்தால் அவர்களை கூட்டணியில்சேர்த்துக் கொள்வீர்களா என நிருபர் ஒருவர் கேட்டபோது, கற்பனையானகேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications