ஏப்ரலில் ஈரான் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் வரும் ஏப்ரல் மாதத்தில் ஈரான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 6 வருடங்களில் ஈரான் செல்லும் முதல் இந்தியப் பிரதமர், வாஜ்பாயே என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபர் முகமது கட்டாமி, இந்திய பிரதமர் வாஜ்பாய் ஈரான் வர வேண்டும் என்று அழைப்புவிடுத்ததையடுத்து வாஜ்பாய் ஏப்ரல் மாதம் ஈரான் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் வாஜ்பாயின் ஈரான் சுற்றுப்பயணத்தின் போது பொருளாதாரம் உள்பட பல துறைகளில் இரு நாடுகளும்இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்படும்.
கடந்த வாரம்தான் இந்தியாவும், ஈரானும் எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திக்கரிப்பு, எரிவாயு தயாரிப்புஆகியவை குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது நினைவிருக்கலாம்.
மேலும் எண்ணெய் உற்பத்தில் ஈரான் உலக அளவில் முன்னணியில் இருப்பதால் ஈரானுடன் உள்ள தொடர்பைமேலும் வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது.
மேலும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கடந்த வருடம் ஈரான் சென்றார். அப்போதுநாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றும் கலாச்சாரத் துறையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவதுகுறித்தான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் வாஜ்பாயின் ஈரான் பயணம், இந்தியாவுக்கும், முஸ்லீம் நாடுகளுக்கும் இடையே உள்ள உறவைவலுவாக உள்ளதையே காட்டுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.