தலித்துகளுக்கு அதிக எம்.பி.தொகுதி வேண்டும்
சென்னை:
தலித்துகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் அவர்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் அக்கட்சியின் தமிழ் மாநிலக் கிளைத் தொடக்கவிழா மாநாட்டில் பேசிய பாஸ்வான்,
பதவி உயர்வில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி படுத்துவதற்காக அரசியலமைப்பை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைதலித்துகளின் நலனிற்காக எடுத்து வருகிறார் பிரதமர் வாஜ்பாய்.
தலித்துகளுக்காக செயலாற்ற மற்ற தலித் கட்சிகள் தவறியதால் தான் தலித்களின் நலன் காக்க இக்கட்சி உதயமாகிறது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை போன்று அதன் ஒரு அங்கமான லோக் ஜன சக்தி கட்சியும், முஸ்லீம் மத சட்டம் மற்றும் அயோத்திவிவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.