காரில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

காரால் மோதப்பட்ட ஒருவர் காரின் கீழ் பகுதியில் சிக்கி 1 கிலோமீட்டர் தூரம்வரைஇழுத்துச் செல்லப்பட்ட பின்பும் உயிர் பிழைத்தார்.

இந்த அதிசய சம்பவம் மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்துள்ளது.

மலேசியா, கோலாலம்பூரில் காரின் ஓட்டுனர் தனது காரில் ஒருவர் அடிபட்டு காரின் கீழ்பகுதியில் சிக்கிக் கொண்டு இழுத்து வரப்பட்டிருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிவந்துள்ளார்.

இவருக்கு உண்மை தெரியாமலே தன்னை பலரும் மோட்டார் சைக்கிளில் துரத்திவருவதைக் கண்டு அஞ்சி தப்பிப்பதற்காக காவல் நிலையம் சென்றபோது தான் தனதுகாரில் ஒருவர் அடிபட்டு

இழுத்து வரப்பட்டது அவருக்கு தெரியவந்தது. அதைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சிஅடைந்தார்.

காரில் அடிப்பட்ட நபர் ஹெல்மெட்டும், தோல் சட்டையும் அணிந்திருந்தார். பலத்தகாயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இது சம்பவம் குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் அதிகாரி மொகமதச் பாக்ரிஜினின் கூறுகையில், காரை ஓட்டி வந்தவர் 43 வயதான உயர் அதிகாரி. அவர் தன்காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது கார் எதன் மீதோ இடித்தது போல்உணர்ந்திருக்கிறார்.

அவர் இறங்கி சோதனை செய்யும் முன் 10 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரைகாரை சூழ்ந்து கொண்டு ஹெல்மெட், கம்புகள் மூலம் அவரது காரின் கண்ணாடிகளைஉடைக்க தொடங்கிவிட்டனர். இதனால் பயம்கொண்டு காரை வேகமாக ஓட்டி வந்துஅருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.அப்போதுதான் அவருக்கு தன்காரில் ஒருவர் அடிபட்டதே தெரியவந்தது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+