அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுபோட முடியாது!
சென்னை:
நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என தேர்தல்ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தற்போது 70 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விரைவில்அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தலில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்அ.தி.மு.க.தலைவர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பை தேர்தல் ஆணையம்ஏற்றுக்கொள்ளும்.
மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் இந்திய தேர்தலில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர்தேர்தலில் தற்போது ஏற்பட்ட குழப்பம் அவர்களுடைய தேர்தல் முறையினால் ஏற்பட்டதாகும்.
அமெரிக்கத் தேர்தல் முறை வேறு, இந்திய தேர்தல் அமைப்பு முறை வேறு. எனவே, இந்த விஷயத்தில் அமெரிக்கதேர்தலை ஒப்பீடு செய்வது நல்லதல்ல.
பிப்ரவரி 28ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி கூட்டும் சர்வகட்சி கூட்டத்தில் மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அனைத்து கட்சியினருக்கும் விளக்கப்படும் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications