For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் மகன் பாண்டிச்சேரி முதல்வரா?: ராம்தாஸ் மறுக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தன் மகனை பாண்டிச்சேரியில் போட்டியிட வைக்கும் எண்ணமோ அல்லதுபாண்டிச்சேரியின் முதல்வராக்கும் எண்ணமோ தமக்கு இல்லை என பாட்டாளி மக்கள்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ் கூறியதாவது:

பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான அணியை ஏற்று நடத்துமாறுஜெயலலிதா என்னிடம் உத்தரவாதம் எதுவும் கொடுக்கவில்லை.

பாண்டிச்சேரி விவகாரம்தான் காங்கிரஸ், த.மா.கா. கட்சிகள் அ..தி.மு.கவுடன் தேர்தல்கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். இந் நிலையில்நான் இது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை.

விடுதலைப் புலி ஆதரவாளர்களான பா.ம.கவை எப்படி சேர்க்கலாம் என அ.தி.மு.க.அணியில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கேட்டன. அவர்களுக்கு ஜெயலலிதாவேதக்க பதிலளித்து விட்டார்.

அ.தி.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டாலும் அவர்கள்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவுடன் இருக்கிறார்கள். கூட்டணிஅமைத்திருப்பதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க. கூட்டணி பூஜ்ய கூட்டணி. தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு எதிரானநிலைதான் காணப்படுகிறது. காங்கிரசும், த.மா.கா.வும் அ.தி.மு.க. அணியில்சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,

அந்த இரு கட்சிகளும் பெரிய கட்சிகள். அவர்களுடன் என்னுடையது போன்ற சிறியகட்சிகள் பேசி அவர்களை சமாதானப்படுத்த முடியாது. இதில் நிலவி வரும் அனைத்துபிரச்சனைகளையும் ஜெயலலிதா களைந்து அனைவரையும் திருப்தி அடையவைப்பார்.

தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.விடம் இன்னும் பேச்சு வார்த்தை எதுவும்நடத்தவில்லை. மார்ச் மாதம் 1-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் வராது என்றார் ராமதாஸ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X