தன்னலமற்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
மதுரை:
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தன்னலமற்ற முறையில் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கும் இயக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்துமக்களிடையே தவறான எண்ணம் நிலவுவதாக அந்த இயக்கத்தின் பிரச்சார பிரமுகர் டாக்டர். ஸ்ரீகாந்த் ஜோஷி கூறினார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக 1,000 பேரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அனுப்பி வைத்துள்ளது.ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில இடிந்து போன கோயில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், மசூதிகளையும் கட்டவுள்ளது.
ராமர் பிறந்த இடம் குறித்து எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. விஸ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும். தேசியஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. ராமர் கோவில் கட்டுவதை ஒதுக்கி விட்டு தே.ஜ.கூட்டணியின் தேர்தல் அறிக்கையை பின்பற்றிவருகிறது.
மக்கள் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் உண்மையை உணர்ந்து கொண்டு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம்.
கிறிஸ்துவ தேவாலயங்களையும், மசூதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் கூறியுள்ளார். இந்தியர்கள் அனைவரும்இந்திய முறைப்படியான வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு கோவில்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை அந்த மதத்தவரால்பராமரிக்கப்படுவது போல் கோவில்கள் இந்துக்களால் பராமரிக்கப்பட வேண்டும். கோவில்களை பராமரிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்று நிறுவப்படவேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications