சிக்னல் போர்டு திருடும் பாங்காக் திருடர்கள்
பாங்காக்:
தாய்லாந்தின் தலை (வலி) நகரான பாங்காக்கில் இன்னவகையான குற்றங்கள் தான் நடக்கும் என கணக்கில்லை. நம்மூரில் தெருக் குழாய்களையும்,டெலிபோன் வயர்களையும் திருடுவது போல் அங்குள்ள திருடர்களுக்கு போக்குவரத்து சிக்னல் போர்டுகளை திருடுவது கைவந்த கலை.
இதனால் ஏற்படும் விளைவு போக்குவரத்து விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாவதுதான். உலகிலேயே சாலை விபத்துகளில் பலியாவோரின்எண்ணிக்கை தாய்லாந்தில் தான் அதிகம். கடந்தாண்டு நெடுஞ்சாலை விபத்துகளில் மட்டும் பலியானோர் 19000 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருடர்கள் தாங்கள் திருடும் இத்தகைய அலுமினிய போர்டுகளை பழைய பொருட்கள் கடையில் எடைக்கு போட்டு விடுகின்றனர். இதனால் அரசுக்குஆண்டுதோறும் ஒரு கோடி பாத்கள் (தாய்லாந்து நாணயம்) இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை தெரிவிக்கிறது.
பாங்காக் நகர போலீசாருடன் இக்குற்றங்களை தடுப்பது கடினம் என்கின்றனர். நகருக்கு வெளியே இரவு நேரத்தில் நடைபெறும் இத்தகைய குற்றங்களின்போது, சில நேரங்களில் 150 கிலோ எடையுள்ள சிக்னல் போர்டுகளை ட்ரக்கில் வந்து திருடும் அளவிற்கு அவர்கள் ஒரு தொழில்முறை திருடர்களாகவேசெயல்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications