திருவள்ளூர் துப்பாக்கிச்சூடு: இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரவி என்பவரின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சத்திற்கான காசோலையைபால்வளத்துறை அமைச்சர் சுந்தரம் திங்கள்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் மின் திருட்டு நடந்து வருகிறது என்று கூறி மின் துறை ஆய்வாளர்களுக்குப் புகார்கள் வந்தது. இதையடுத்துஅவர்கள விசாரணைக்காக மின் உற்பத்தி நிலையத்தில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இதை எதிர்த்து, மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாகமாறியதால், போலீஸார் கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் ரவி (18) என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் இறந்த ரவியின் தந்தை ஆறுமுகத்திடம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ரூ 1 லட்சத்திற்கானகாசோலையை அமைச்சர் சுந்தரம் வழங்கினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications