For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்துக்கு துபாய் குதிரைகள்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 80 அரேபியக் குதிரைகளைக் கொடுப்பதாக துபாய் கூறியுள்ளது.

இதுகுறித்து, துபாயிலுள்ள இந்திய பொதுக் கவுன்சில் உறுப்பினர் அசோக் முகர்ஜி கூறியதாவது:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் ஏற்கனவே உதவி செய்துள்ளது. தற்போது, துபாயிலிருந்து 80 குதிரைகளை கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குதிரைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை குஜராத் அரசு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக குஜராத்அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரேபியக் குதிரைகளின் விலைகள் சர்வதேச சந்தைகளில் அதிக அளவில் இருக்கும். குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகஏற்கனவே துபாயிலுள்ள பல இந்திய அமைப்புக்கள், ரூ 49 மில்லியனை பிரதமர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து, குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண நிதியில் துபாய் தான் அதிக அளவு நிதி வழங்கியுள்ளது.

மேலும் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், உணவுப் பொருட்கள், மருந்துகள், துணி வகைகள், ஷூக்கள்ஆகியவை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மக்களுக்காக நிதி கொடுக்க பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவு நிதி கொடுத்துள்ளார்கள்.பள்ளிகளிடமிருந்து மட்டும் ரூ 12 மில்லியன் வசூலாகியுள்ளது.

மேலும் மார்ச் 1 ம் தேதி துபாயில் இந்தியக் கண்காட்சி 2001 என்ற கண்காட்சியை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயும்குஜராத் மாநில மக்களுக்காகக் கொடுக்கப்படும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X