நாளை சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
சென் னை:
ஹைதராபாத் பயணத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை சென்னை திரும்புகிறார்.த.மா.கா.வுக்கு விதிக்கப்பட்ட கெடு 1-ம் தேதியுடன் முடிவடைவதால் ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகு புதிய அரசியல்சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
கூட்டணி குறித்து மார்ச் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு தமிழ் மாநல காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா கெடு விதித்துள்ளார்.தனது முடிவை அறிவித்து விட்டு அவர் ஹைதராபாத் சென்று விட்டார். அவரது அறிவிப்பு த.மா.கா வட்டாரத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பல் வேறு த லைவர்களுடன் மூப்பனார் தினசரி ஆலோச னை நடத்தி வருகிறார். சோவுடன் பேசினார். புதுவைமுதல்வர், திமுக தலைவர்களுடன் பேசியுள்ளார். இருப்பினும் இன்னும் முடிவு எதையும் அவர் அறிவிக்கவில் லை. தொடர்ந்துபேசி வருகிறார். மார்ச் 1ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க முயற்சிப்போம் என்று மட்டு மே அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹைதரபாத் பயணத்தை முடித்து விட்டு புதன்கிழமை தமிழகம் திரும்புகிறார் ஜெயலலிதா. அவர் வந்த பிறகுபல்வேறு கூட்டணித் தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, மார்ச் 1ம் தேதி ஜெயலலிதாவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசு வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெ. திரும்புவதையடுத்து தமிழ் மாநில காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது எனலாம்.












Click it and Unblock the Notifications