இப்படியும் ஒரு மோசடி...
சென் னை:
மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணைக் கற்பழித்ததாக 2 இ ளைஞர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (24), ரங்கன் (27) ஆகியோருக்கும்இடையே பழக்கம் ஏற்பட்டது. ருெங்கிப் பழகினார்கள். இதைப் பயன்படுத்தி தனலட்சுமி யை அடைய இருவரும்விரும்பினார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவரை, தங்களில் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினர். இதையடுத்து யாராவது தன்னைத்திருமணம் செய்து கொள்வார்கள் என்று தனலட்சுமி நம்பினார். இ தையடுத்து அவர்களது ஆசைக்கு இணங்கினார். ஆனால்கூறியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தனலட்சுமி அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவே, கொ லை செய்து விடுவதாக குமாரும்,ரங்கனும் மிரட்டினர். இ தையடுத்து மாமல்லபுரம் போலீஸில் தனலட்சுமி புகார் கொடுத்தார். இ தையடுத்து போலீஸார், குமார்,ரங்கன் மற்றும் அவர்களுக்கு உதவியதாக ஆறுமுகம் (38), சேதுராமன் (34) ஆகியோரையும் கைது செய்தனர்.