பரிதாபத்தில் பள்ளி குழந்தைகள்
புஜ் (குஜராத்):
குஜராத்தில் ஜனவரி 26 ல் அனைவரையும் பாதித்த பூகம்பத்திலிருந்து மீண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்திருக்கின்றனர்.உயிர்பிழைத்த குழந்தைகள் பலரும் பள்ளிக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் கண்களிலிருந்து இன்னும் பூகம்ப பாதிப்புவிலகவில்லை. படிப்பில் நாட்டமில்லாமல் வெறித்த பார்வையுடன் இருக்கின்றனர்.
இந்திராபாய் பெண்கள் பள்ளி மாணவியான கந்தோல் என்ற சிறுமியிடம் பேசிய போது எதையும் கூறாமல் வெறித்துபார்த்தபடி இருந்தவர் திக்கித்திணறி கூறிய வார்த்தை எனது சகோதரன் இறந்து விட்டான என்பதே. மனோரீதியில்அவர்கள் குணப்படுத்தப்பட்டாலொழிய அக்குழந்தைகள் சாதாரண நிலைக்கு திரும்பி படிப்பை தொடர இயலாது.
இப்பள்ளியில் திங்களன்று பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் சட்டமன்ற சபாநாயகர்தீருபாய் ஷா மறறும் தொழில்கல்வி அமைச்சர் பாரத் பரோட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பள்ளியில் நடப்பதை காட்டிலும் பூகம்பத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள், தாங்கள்இழந்த உறவினர்கள் பற்றிய நினைவிலேயே உள்ளனர்.
குஜராத் பூகம்பத்திற்கும், தற்போது உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதற்கும் தொடர்பில்லைஎனக்கூறுகிறார் பிரான்ஸின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் தலைவர் பெர்ட்ரான்ட் கிரேலே.
அங்கோர்வாலா சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் தினேஷ் கோர் கூறும் போது, குழந்தைகளை காட்டிலும்சீனியர் மாணவர்கள்தான் மனோரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுளளனர்.
இதனிடையே, இப்பகுதியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களில் பத்தில் ஒரு பங்கினர்தான் பள்ளிக்குவருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications