புத்தர் சிலையை அழிக்க இலங்கையிலும் எதிர்ப்பு
கொழும்பு:
ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு புத்த மதத்தினர் அதிகம் வாழும் இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கைஅரசு தலிபன்களின் இந்த முடிவை மாற்றக் கோரியுள்ளது.
இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராஃப் ஹக்கீம், ஆப்கனின் இந்த முயற்சிக்கு எதிராக சர்வதேச நாடுகளின்ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளார்.
இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே, இலங்கை அரசுடன் இணைந்து புத்தர் சிலைகளை அழிக்கும் ஆப்கன்முடிவை மாற்றக் கோரப் போவதாக தெரிவித்துள்ளார்.
பழங்கால அரிய கலைப் படைப்புகளான பாமிய கால புத்தர் சிலைகளை அழிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி மாளிகை டைரக்டர் ஜெனரல் ஆரியரூபசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குள்ள 53 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை உலகின் உள்ள உயரமான புத்தர் சிலைகளில் ஒன்றாகும். 1998லேயே தலிபன்கள் அச்சிலையை அழிக்கமுயற்சித்த போது இலங்கை அரசு தலையிட்டு தடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்
புத்தர் சிலைகளை அழிக்க தலிபன்கள் முடிவு