கண்தானம் செய்கிறார் சந்திரிகா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தனது கண்களை தானமாக வழங்குகிறார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அவர் கண்தானம் செய்வதற்கு ஒத்துக் கொண்டுள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் இப்பிரச்சாரத்தின் மூலம் 12000 கிராம சேவா மண்டலங்களின் மூலம் 1லட்சம்பெண்கள் வரை கண்தானம் செய்ய முன்வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது விடுதலைப்புலிகளின் கொலைமுயற்சி தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தவர் சந்திரிகா என்பதுகுறிப்பிடத்தக்கது.
சந்திரிகாவின் தாயாரான இலங்கையின் முன்னாள் பிரதமர் மறைந்த சிரிமாவோ பண்டாரநாயகாவும் தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications