ஜவுளி ஏஜன்டைக் கடத்திய ஆளுங்கட்சியினர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஜவுளி ஏஜன்டைக் கடத்தி சித்திரவதை செய்த ஆளும் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். வயது 40. ஜவுளி புரோக்கரான இவர் சின்னப்பா லே -அவுட்டில் உள்ள குரு என்டர்பிரைசசில் வேலை செய்து வருகிறார். குரு என்டர்பிரைசசஸ் குமாரசாமி என்பவருக்குச் சொந்தமானதாகும்.

இவர் மூலம் தான் ஜவுளி இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, பணம் வசூலிக்கப்படும்.

இதற்கிடையே, சம்பவத்தன்று திலீப்குமார் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, இவர் வேலை செய்து வந்த குரு என்டர் பிரைசஸ் உரிமையாளர்குமாரசாமி, அவரது உறவினர் சுப்ரமணியம் மற்றும் பலர் சேர்ந்து காரில் திலீப் குமாரைக் கடத்திச் சென்றனர்.

பின்னர் அவரை சேலம் மாவட்ட தி.மு.க.கவுன்சிலர் முருகேசனின் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். திலீப் குமாரை மிரட்டி வெற்றுப் பேப்பர்களில்கையெழுத்து வாங்கி விட்டு அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து திலீப் குமார் போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார், குற்றவாளி ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். இதையடுத்து திலீப் குமார் நீதிமன்றத்தில் புகார்கொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆளும் கட்சிப் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றுபோலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, போலீஸார் ஆளும் கட்சி கவுன்சிலர் முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+