இந்திய கடற்படைக்கு புதிய துணைத் தளபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக மாதவேந்திர சிங் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக இருந்த ஜேக்கப் புதன்கிழமை ஓய்வு பெற்றார்.
தற்போது மாதவேந்திர சிங், மேற்கு கடற்படை துறையில் கமாண்டராக உள்ளார். இவர் இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக இந்த மாதஇறுதியில் பதவியேற்றுக் கொள்வார்.
இவர் பதவியேற்பு கடற்படை தளபதி சுசில் குமார் சிங் தலைமையில் நடக்கும். மேலும் சுஷில் குமார் ஓய்வு பெற்றால் தளபதியாக சிங்பொறுப்பேற்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மேற்கண்ட தகவல்களை மேற்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications