பட்ஜெட்டுக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை:
நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள, மக்களுக்கு எதிரான பட்ஜெட் இது என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறினார்.
மத்திய அரசின் பட்ஜெட் பற்றிய தனது நீண்ட விமர்சனத்தில், மக்களுக்கெதிரான, நடுத்தர வர்க்கத்திற்கெதிரான, தொழிலாளர்களுக்கெதிரான,சிறுதொழில்களுக்கெதிரான பட்ஜெட் இது என்று விமர்சித்துள்ளார் ஜெயலலிதா.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த பட்ஜெட். சுற்றுலா மற்றும்விவசாயத்துறை வளர்ச்சிக்கு வழி காணப்படவில்லை.
பல்வேறு மாநில தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் சாத்தியமற்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்துதரப்பினரையும் அரவணைத்து செல்வது போல் காட்டப்பட்டுள்ள பட்ஜெட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது பற்றி கூறப்படவில்லை.
12000 கோடி ரூபாய் அளவிற்கு அரசுநிறுவன பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வற்புறுத்தலாகும் என குறைகூறியுள்ளார்.
யு.என்.ஐ.