கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை தனியார் நிதி நிறுவன ஊழியரி டம் பட்டப் பகலில் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி மூன்றரைலட்ச ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரியில் உள்ள பழனிக் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகன் கண்ணன் (33).இவர் கோவையில் உள்ள வேளாண்மை விற்பனைப் பொருள் நிறுவனம் ஒன்றில் பிரதிநிதியாகப் பணியாற்றிவருகிறார்.
இவர் புதன்கிழமை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் ஒருபாங்கிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணனின் முகத்தில்மிளகாய்ப் பொடியைத் தூவினர். மேலும் அவர் கையில் வைத்திருந்த 3. 5லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications