போட்டோ கிராபர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்த் தீவிரவாதி மாறன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, தாக்கப்பட்ட பத்திரிகை பு கைப்படக்காரர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை செய்தியாளர்கள் சங்கம்முதல்வர் கருணாநிதிக்குக்கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்க செயலாளர் க. சுப்ரமணியன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாறன் நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்ட நிகழ்ச்சியை படம் எடுக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாகபோலீஸாரால் அவர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பல புகைப்படக்காரர்கள் காயமடைந்தனர். அவர்களது கேமராக்களும் சேதமடைந்தன.இவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக் கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில்நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications