Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல தமிழ் பத்திரிக்கை தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ. என்.சிவராமன் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.

அவருக்கு வயது 96. சிவராமனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.இவரைப்போல் 50 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக தமிழகத்தில் யாரும் இல்லை எனலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவருக்குபுதன்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வென்டிலேட்டரில் புதன்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு மரணமடைந்தார்.

சிவராமன் பல துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். 1987 ல் தினமணி பத்திரிக்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின் வேதபாடங்கள் கற்கத்தொடங்கினார். அவர் திருக்குரானால் அதிகம் ஈர்க்கப்பட்டவர். இவர் சுதந்திர போராட்ட வீரர்.

முதல்வர் இரங்கல்:

தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணமடைந்ததற்கு, முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், தமிழ்பத்திரிக்கை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சிவராமன். குறிப்பாக தினமணி பத்திரிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் என்று கூறியுள்ளார்முதல்வர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+