மின்னணு எந்திரத்தால் தேர்தலில் பிரச்சனை வராது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷனின் துணை ஆணையர்கள் மறுத்துள்ளனர்.

சென்னையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட மின்னணு வாக்குபதிவு பற்றிய பயிற்சிக்குப்பின் நிருபர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர்களான,சுபாஷ் பானியும், சாயன் சட்டர்ஜியும் இம்மறுப்பை வெளியிட்டதோடு,

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் உள்ள தகவல்களை மாற்ற முடியாத வகையில் ஒருமுறை மட்டும் எழுதப்படக்கூடிய கம்ப்யூட்டர் டிஸ்க்குகள்பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், மின்னணுவாக்குபதிவு எந்திரங்களை இஷ்டத்திற்கு மாற்ற முடியாது.

அந்த எந்திரங்களை வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துமுன் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு சீலிடப்பட்டுவிடும். மேற்கொண்டுஎந்த மாற்றங்களும் செய்யப்பட முடியாது.

இது குறித்த வழக்கில், நீதி மன்ற விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்கும். அது பற்றி தற்போது கூறுவதுநீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.

இந்தியா முழுவதும் 65000 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனை வாக்காளர்கள் மட்டுமல்லாது, அரசியல் கட்சிகளும்,பத்திரிகைகளும் கூட வரவேற்றுள்ளன.

டெல்லியை சேர்ந்த அமைப்பு ஒன்றின் சர்வேயிலும் இதன் உபயோகத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இனி வரும் காலங்களில் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்காக இந்தாண்டிற்குள் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை லட்சம்வாக்குபதிவு எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. அடுத்தாண்டும் இதே எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்படும்.

இந்திய தேர்தல் முறையும், அதற்கு பயன்படுத்தப்படும் வாக்குபதிவு எந்திரங்களும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நடைமுறையிலிருந்துமாறுபட்டவை.எனவே, அவற்றோடு இத்தேர்தல் நடவடிக்கைகளை ஒப்பிட முடியாது.

தற்போதைய தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளிடமிருந்து தேவையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.வரும் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும்.

அனைத்து வாக்காளர்களுக்கும் மார்ச் மாதத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்படவில்லையெனில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பின்னர்அறிவிக்கப்படும் என்றனர்.

பேட்டியின் போது உடனிருந்த தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி, தமிழகத்தில் உள்ள 4.79 கோடி வாக்காளர்களில் 3.25 கோடி வாக்காளர்களுக்குஅடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+