பாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு
சுயேச்சையாக இயங்கி வந்த பல பகுதிகள் ஒன்று சேர முடிவெடுத்து, ஒரு மைய அமைப்பை உருவாக்கும் போது - சில அதிகாரங்கள் மட்டும் மையஅரசுக்கு விட்டுக் கொடுக்கப்படும்: அப்படித் தோற்றுவிக்கப்படுவது ஃபெடரல் அமைப்பு. இதற்கு அமெரிக்காவை உதாரணமாகக் கொள்ளலாம்.
ஒரு மைய அமைப்பு பல பகுதிகளுக்கு ஆட்சி உரிமைகளை பகிர்ந்தளிக்க முடிவு செய்யும்போது, யூனிட்டரி வகை அரசியல் சட்டம் உருவாகிறது. எழுதப்படாதஅரசியல் சட்டத்தைக் கொண்ட, இங்கிலாந்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
நம் நாட்டிலும் மைய அமைப்புதான், பிரதேசங்களுக்கு ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தது. அதனால் தான் நமது அரசியல் சடட்த்தில் யூனிட்டரிஅம்சங்கள் இடம் பெற்றன. இப்போது இதை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை.
சொல்லப்போனால், இப்போது இதை மாற்றக் கூடாது என்பதற்கு முக்கியமான காரணங்களைக் கூற முடியும். ஆங்காங்கே பிரிவினைவாதம்அவ்வப்போது தலை தூக்கி வருகிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று ஆரம்பித்தால், அது பிரிந்து போகும் உரிமை என்ற வியாபித்து,இறுதியில் பிரிவினையில் போய் முடியலாம். - இருக்கிற அமைப்பை இப்போது மாற்றக் கூடாது என்பதற்கு இது ஒரு காரணம்.
பொருளாதார உலக மயம் என்று ஆரம்பித்த பிறகு, அயல்நாட்டுத் தொடர்புகள் மாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்பட ஆரம்பித்திருகிறது. - அதிகஅளவில் என்று சொல்வதை விட, வேண்டாத அளவில் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
இப்படிப்பட்ட தொடர்புகள் மாநிலங்களில் ஏற்பட்டு வருகிற சூழ்நிலையில், மாநிலங்களுக்கு அரசியல் சட்ட ரீதியாக, சுயாட்சி அதிகாரங்கள்வழங்கப்பட்டால், வெவ்வேறு அயல்நாடுகள், வெவ்வேறு மாநிலங்களைக் குறி வைத்து பிரிவினையைத் தூண்டலாம்.
நாட்டின் பாதுகாப்புக்குக் கூட பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படலாம். இவையெல்லாம் ஓரிரு தினங்களில் நடந்து விடாது என்பது உண்மையே. ஆனால்,காலப்போக்கில் இந்த மாதிரி நடக்கக் கூடும் என்பதும் உண்மையே. இருக்கிற அமைப்பை இப்போது மாற்ற வேண்டாம் என்பதற்கு இதுமற்றொரு காரணம்.
மாநில அரசு சரியில்லை என்று சொல்ல மத்திய அரசுக்கு எப்படி உரிமை இருக்கலாம் என்ற கேள்வி எடுத்த எடுப்பில் ரொம்ப நியாயமானதாகத்தெரியலாம்.
ஆனால் இதே வாதப்படி பார்த்தால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை சரியில்லை என்று சொல்லி மாற்ற, சுப்ரீம் கோர்ட்டுக்கு எப்படி அதிகாரம்இருக்கலாம்? அல்லது ஜில்லா கோர்ட் உத்தரவை ஹைகோர்ட் எப்படி மாற்றலாம்? சுப்ரீம் கோர்ட்டே தவறான முடிவு செய்தால் என்ன செய்வது?அதை யார் மாற்றுவது?
அதாவது, இந்த மாதிரி அணுகுமுறைகளை மேற்கொண்டால், தான் தோன்றித்தனம்தான் மிஞ்சும். எழக் கூடிய கோரிக்கைகளை மனதில் வைத்துத்தான்,அரசியல் சட்ட மறு ஆய்வுக்குரிய நேரம் இதுவல்ல - என்று நாம் முன்பு கூறயிருந்தோம்.
இப்போது வர ஆரம்பித்துள்ள கோரிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த மறு ஆய்வு முயற்சியே, மறு ஆய்வுக்குரியது என்றே தோன்றுகிறது.