பாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு
சோ
தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் - தமிழக முதல்வர், காஷ்மீர் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் மாறன்- ஆகியோர் மாநில சுயாட்சி பற்றியும், அதைெயொட்டிய கோரிக்கைகள் பற்றியும், அதையொட்டிய கோரிக்கைகள் பற்றியும்வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கும் கமிஷன், இது பற்றியெல்லாம் ஆராய வேண்டும் என்றும் அந்த மேடையில் கூறப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்ட மறு ஆய்வுக்கான கமிஷன் நியமிக்கப்பட்ட போதே, மத்திய அரசின் வலிமையைக் குறைக்கக் கூடிய அளவில் மாநில அரசுகளின்உரிமைகள் வற்புறுத்தப்படுவதற்கு ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நாம் எச்சரித்தோம். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக, காஷ்மீர் முதல்வர்கள் மட்டுமல்ல. வேறு பலரும் கூட மாநில உரிமைகள் பற்றி வலியுறுத்தி மத்திய அரசின் அதிகாரத்தைக் குறைக்கும்வழிமுறைகளை வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் சொல்கிற ஓர் அடிப்படையான விஷயம் - இன்று இருப்பது உண்மையான சமஷ்டி அமைப்பு அல்ல என்பதுதான். இதில் சர்ச்சைக்குஇடமில்லை. நமது அரசியல் சட்டம் ஒரு சமஷ்டி அமைப்பை தோற்றுவிக்கவில்லைதான்.
அதனால் என்ன தவறு? மைய ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அமைப்பைத் தோற்றுவிக்கிற அரசியல் சட்டங்களும் உண்டு. இவை யூனிட்டரிவகை அரசியல் சட்டங்கள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்து, மைய ஆட்சிக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை மட்டும் வழங்குகிறசமஷ்டி அமைப்புகளைத் தோற்றுவிக்கிற அரசியல் சட்டங்களும் உண்டு - இவை ஃபெடரல் வகை அரசியல் அமைப்புகள்.
மேற் கூறப்பட்ட இரண்டு வகைகளின் தன்மைகளையும், வெவ்வேறு அளவுகளில் எடுத்துக் கொள்கிற அமைப்புகளைத் தோற்றுவிக்கிற அரசியல்சட்டங்களும் உண்டு - இவற்றை யூனிட்டரி அம்சங்களைக் கொண்ட ஃபெடரல் அமைப்புகள் என்றும் சொல்லலாம். அல்லது ஃபெடரல் அமச்சங்களைக்கொண்ட யூனிட்டரி அமைப்புகள் என்றும் சொல்லலாம்.
இந்த மூன்றாவது வகையைச் சார்த்ததுதான் நமது அரசியல் சட்டம் தோற்றுவித்திருக்கிற அரசியல் அமைப்பு. இது அரசியல் நிர்ணய சபைவிவாதஙஅகளிலேயே தெளிவாக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications