புத்தர் சிலை உடைப்பு: பாக்.எதிர்ப்பு
இஸ்லாமாபாத்:
பாமியான் நகரில் உள்ள 2 பெரிய புத்தர் சிலைகள் உள்பட நாடு முழுவதும் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதுகுறித்து பாகிஸ்தான் அரசு கருத்து எதுவும் கூறாமல் மெளனம் சாதித்து வந்தாலும் பாகிஸ்தானில் உள்ள சிலஅரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தாலிபன் தீவிரவாதிகள், சிலைகளைத் தொழுவது இஸ்லாமியச்சட்டத்துக்கு எதிரானது என்பதால் நாடு முழுவதிலுமுள்ள புத்தர் சிலைகளை உடைக்கும்படி உத்தர விட்டுள்ளனர்.
இதையடுத்து பாமியான், காபூல், காஞ்னி, ஹெரத், கந்தகர் ஆகிய இடங்களில் உள்ள புத்தர் சிலைகள்உடைக்கப்படுகின்றன.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தற்காலிகத்தலைவர் ஜாவத் ஹாஸ்மி கூறுகையில், புத்தர் சிலைகளை உடைப்பதன் மூலம் சர்வதேச நாடுகளின் வெறுப்பைச்சம்பாதித்துக் கொள்ளப் போகிறது ஆப்கானிஸ்தான் அரசு என்றார்.
இஸ்லாமிய சட்டப்படி, சிலை வழிபாடு கூடாது என்றாலும், புத்தர் சிலைகளை உடைப்பது இஸ்லாம் மதத்திற்கும்,பெளத்த மதத்திற்கும் விரோதமான, கீழ்த்தரமான செயலாகும். இஸ்லாம் மதச்சட்டப்படி சடங்குகள், ஊர்வலங்கள்இஸ்லாம் மதத்திற்கு எதிரானதாகும்.
ஆனால் இஸ்லாமியர்கள் சடங்குகள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துகிறார்கள். அதனால், இஸ்லாம் சட்டம்என்று கூறிக் கொண்டு புத்தர் சிலை உடைக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்றார்.
பாகிஸ்தானில் வாழும் ஆப்கான் அகதி பாஃவாத், புத்தர் சிலைகளை உடைப்பது தவறு என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications