ரயில் நிலைய கொள்ளை: தமிழ் தீவிரவாதிகள் கைவரிசை?
சென்னை:
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் சனிக்கிழ மை இரவு நடந்த கொள் ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க 6சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில் வே ஐ.ஜி. திலகவதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாம்பலம் ரயில்வே டிக்கெட் பதிவு அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரக் கொள் ளை நடந்தது.இரவு 8.30 மணியளவில் அன்றைய டிக்கெட் வசூல் பணத் தை கேஷியர் சையத் அலி மற்றும் சூபர் வைசர்வெங்கட்ராமன் ஆகியோர் எண்ணி ஒரு பையில் வைத்துக் கொண்டு கிளம்பினர். பணப் பையுடன் இருவரும்அறையை விட்டு வெளி யே வந்த போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்க ளை தடுத்து நிறுத்தியது.
அவர்கள் கையில் கத்தி, அரிவாள், உருட்டுக் கட் டைகள் ஆகியவை இருந்தன. துப்பாக்கி ஏந்திய காவலர்களைமுதலில் தாக்கிய அவர்கள் பின்னர் சையத் அலி கையில் இருந்த பணப் பையை பறித்தனர். பின்னர் அலி மற்றும்வெங்கட்ராமன் ஆகியோரையும் தாக்கி விட்டு இருளில் தப்பி விட்டனர்.
மக்கள் கூட்டம் நிறைந்த மாம்பலம் ரயில் நிலையத்தில் நடந்த இந்த திடீர் கொள் ளைச் சம்பவம் பெரும்பரபரப்புக்குள்ளாக்கியது.
தமிழ்த் தீவிரவாதிகளா?:
இதற்கிடையே கொள்ளைச் சம்பவம் நடந்த மாம்பலம் ரயில் நிலைய பகுதியில் 2 பெட்ரோல் குண்டுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் இது திட்டமிடப்பட்ட கொள்ளைச் சம்பவமாக கருதப்படுகிறது. இந்தசம்பவத்தில் 3 பேர் மட்டுமல்லாது, மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே கொள் ளையர்கள் குறித்துத் துப்புக் கொடுத்தால் ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்று போலீஸ்தெரிவித்துள்ளது. மேலும் கொள் ளையர்களைப் பிடிப்பதற்காக 6 சிறப்புப் போலீஸ் குழுக்களும்அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி தெரிவித்துள்ளார்.