தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை: பொருளாதாரம் பாதிப்பு
கொழும்பு:
இலங்கையில் சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தி வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தேயிலை ஏற்றுமதிதான். தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதாரத்துறைநிபுணர்கள் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும்என்று கூறியுள்ளனர்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் தேயிலை தொழிலாளர்களின் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறார். இருப்பினும் பிரச்சனைதீர்ந்தபாடில்லை.
முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட தேயிலை மற்றும் ரப்பர் தொழிலாளர்கள் பிரச்சனையை இலங்கை அரசே தீர்த்து வைத்திருக்கிறது.
இதுதவிர கடந்த மார்ச் மாதம் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து எஸ்டேட் ஊழியர்கள், அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதும்அவர்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
சிலோன் தேயிலை வர்த்தக சங்க தலைவர் டிக்கி ஜூரியான்ஸ் கூறுகையில், எங்களுக்கு சம்பள உயர்வு கண்டிப்பாகத் தேவை. சம்பள உயர்வு தரவில்லையென்றால் நாங்கள் தொடர்ந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவோம். சர்வதேச நாடுகளிலிருந்து தேயிலை வாங்குபவர்களுக்கும்போராட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் சங்கத்தைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் ரூ 400 சம்பள உயர்வு தரக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களில் கொடுத்து வந்ததைப் போல் தற்போதும் சம்பள உயர்வு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் பல பிரச்சனைக்குள்ளாவார்கள் என்றும் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1999 ம் ஆண்டு இலங்கை 284 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்தது. இவற்றில் 268 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications