தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை: பொருளாதாரம் பாதிப்பு
கொழும்பு:
இலங்கையில் சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தி வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தேயிலை ஏற்றுமதிதான். தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதாரத்துறைநிபுணர்கள் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும்என்று கூறியுள்ளனர்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் தேயிலை தொழிலாளர்களின் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறார். இருப்பினும் பிரச்சனைதீர்ந்தபாடில்லை.
முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட தேயிலை மற்றும் ரப்பர் தொழிலாளர்கள் பிரச்சனையை இலங்கை அரசே தீர்த்து வைத்திருக்கிறது.
இதுதவிர கடந்த மார்ச் மாதம் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து எஸ்டேட் ஊழியர்கள், அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதும்அவர்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
சிலோன் தேயிலை வர்த்தக சங்க தலைவர் டிக்கி ஜூரியான்ஸ் கூறுகையில், எங்களுக்கு சம்பள உயர்வு கண்டிப்பாகத் தேவை. சம்பள உயர்வு தரவில்லையென்றால் நாங்கள் தொடர்ந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவோம். சர்வதேச நாடுகளிலிருந்து தேயிலை வாங்குபவர்களுக்கும்போராட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் சங்கத்தைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் ரூ 400 சம்பள உயர்வு தரக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களில் கொடுத்து வந்ததைப் போல் தற்போதும் சம்பள உயர்வு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் பல பிரச்சனைக்குள்ளாவார்கள் என்றும் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1999 ம் ஆண்டு இலங்கை 284 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்தது. இவற்றில் 268 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications