For Daily Alerts
Just In
3 வது அணி வேண்டும் .. ராஜ் டிவி கருத்துக் கணிப்பு
சென்னை:
தமிழகத்தின் தனியார் டிவி நிறுவனமான ராஜ் டிவி நடத்திய தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில், பெரும்பாலான மக்கள் மூன்றாவது அணி அமைவதையேவிரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் குறித்து ராஜ் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், 58.9 சதவீத மக்கள் மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
41 சதவீதம் பேர் மூன்றாவது அணி அமைவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்கள்.
பெரும்பாலான மக்கள் மூப்பனார் தலைமையில் 3 வது அணி அமைய வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.
இந்தக் கருத்துக்கணிப்பு நாடு முழுவதிலுமுள்ள தமிழர்களிடம் தொடர்பு கொண்டு நடத்தப்பட்டது. அவர்களுடன் தொலைபேசி, பேக்ஸ் மற்றும் ஈ மெயில் மூலம்தொடர்பு கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது என்று ராஜ் டிவி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 6, 2001, 5:30 [IST]