திமுகவிடம் 62 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.க.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக பாரதிய ஜனதாகட்சித் தலைவர் கிருபாநிதி வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ.க வுக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிட 62 இடங்கள் ஒதுக்குமாறு தி.மு.கதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் கேட்போம். அதற்காக 62 தொகுதிகள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதியைவற்புறுத்த மாட்டோம்.
முதல்வர் கருணாநிதி எங்களுக்கு நாங்கள் கேட்குமளவு தொகுதிகளை ஒதுக்குவார் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாகத் திகழும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கூட்டணிக் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் 62 இடங்கள் ஒதுக்கியே தீர வேண்டும் என்று மல்லுக்கட்டுவதில் அர்த்தமில்லை. இது ஒரு சமரச உடன்பாடு.
தமிழகத்தில் எங்களது கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி அதிக அளவு தொகுதிகளை எங்களுக்குக் கொடுப்பார் என்றுநம்புகிறோம்.
தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் எங்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எவ்வித கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது.
தமிழகத்தில் பாரதிய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக அளவு தொகுதிகளை கருணாநிதி ஒதுக்குவார் என்று பிரதமர் வாஜ்பாயும்நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபைத் தேர்தலுக்காக பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள்எப்போது தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கிருபாநிதி கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications