ஈரானில் பெண்கள் மீதான கட்டுப்பாடு தளர்வு
தெஹரான்:
ஈரான் நாட்டு பெண்களுக்கான கட்டுப்பாடு தளர்கிறது. அந்நாட்டு பெண்கள் வெளிநாடு சென்று படிக்க அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டம்இயற்றப்பட்டுள்ளது.
திருமணமாகாத பெண்கள் அரசு அளிக்கும் ஸ்காலர்ஷிப்பில் வெளிநாடு சென்று படிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றம்ஏற்றுக்கொண்டது. அதற்கு ஈரானின் அரசியலமைப்பு சட்ட நிர்வாக குழுவும் அனுமதி அளித்துவிட்டது.
மதவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானில் முஸ்லீம் பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படடு வந்தது. மேற்கத்திய கலாசாரம் முஸ்லீம்பெண்களை சீரழித்துவிடும் என்ற பழமையான வாதமே இதற்கு காரணமாகும்.
ஈரான் நாட்டு சட்டப்படி வெளிநாடு செல்ல திருமணமான பெண்கள் தங்கள் கணவரிடமும், திருமணமாகாதவர்கள் தங்கள் தந்தையிடமும் அனுமதிபெறவேண்டும்.
கடந்த முறை ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இம்மசோதாவை முஸ்லீம் பழமைவாதிகள் நிறைந்த நிர்வாகக்குழு திருத்தங்கள் செய்யக்கோரியிருந்தது.
திருத்தப்பட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து நிர்வாகக்குழு இம்மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
யு.என்.ஐ.