For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் அதிருப்தி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் காங்கிரசை ஜெயலலிதா கலந்துஆலோசிக்கவேயில்லை.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ்- காங்கிரஸ் கடசிகளுக்கு மொத்தமாக 50தொகுதிகள் தருவதாகக் கூறிய ஜெயலலிதா பின்னர் அதை மீண்டும் பழையஎண்ணிக்கையான 45 ஆகக் குறைத்துவிட்டார்.

இதையடுத்து மூப்பனார் தரப்பிலிருந்து பெரும் முயற்சி செய்ய்படடதையடுத்து இந்தஎண்ணிக்கையை 47 ஆக ஜெயலலிதா உயர்த்தியுள்ளார்.

இதில் 10 இடங்களை மட்டுமே காங்கிரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் வழங்கும்.முன்பு 55 இடங்கள் கிடைக்கும் இதில் 16ல் காங்கிரஸ் போட்டியிடும் என டெல்லியில்உட்கார்ந்து கொண்டு அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டனர்.

ஆனால், அவர்களை ஜெயலலிதா கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.மொத்தமே 47 தான் என்று கூறிவிட்டார். இதை மீண்டும் 50 ஆக உயர்த்த மூப்பனார்முயன்று வருகிறார்.

என்ன ஆனாலும் சரி பாண்டிச்சேரி ஆட்சியை பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்துபறித்து காங்கிரசுக்கு தர முடியாது என்பதில் ஜெயலலிதா மிகவும் கராராகவேஇருக்கிறார்.

அங்கு அதிமுக கூட்டணி வென்றால் முதல் இரண்டரை ஆண்டுகாலம் பாட்டாளிமக்கள் கட்சி ஆட்சி நடத்தும், கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் அடுத்த இரண்டரைஆண்டுகால ஆட்சியை காங்கிரசுக்குத் தரத தயார் என ஜெயலலிதா கூறிவிட்டார்.

மொத்தமாக பாண்டிச்சேரி ஆட்சி எங்களுக்குத் தான் வேண்டும் என்ற காங்கிரசின்கோரிக்கையை ஜெயலலிதா திட்டவட்டமாக நிராகரத்துவிட்டார்.

வேண்டுமானால் பாண்டிச்சேரியில் அதிமுக-பா.ம.கவை எதிர்த்துக் கூடகாங்கிரஸ்-த.மா.கா போட்டியிடலாம் எனவும் கூறிவிட்டார்.

தமிழகத்தில் ஒரு கூட்டணி, பாண்டிச்சேரியில் இன்னொறு கூட்டணி என்றால் மக்கள்சிரிப்பார்கள் என காங்கிரஸ் சொல்லி வருவதை ஜெயலலிதா காதில் வாங்கவேதயாராக இல்லை.

மேலும் கூட்டணி தொடர்பாக இனி காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை கூடநடத்த மாட்டேன் என்ற நிலையை ஜெயலலிதா எடுத்துவிட்டார். எதுவாக இருந்தாலும்மூப்பனார் மூலமாகத் தான் பேச வேண்டும் எனவும் காங்கிரசுக்கு அவர் நிபந்தனைவிதித்துவிட்டார்.

இதனால் காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளது. ஆனால், மூப்பனாரேஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்துவிட்டதால், ஜெயாவை விட்டால் வேறுவழியே இல்லை என்ற பாவப்பட்ட நிலைக்கு காங்கிரஸ் தள்ளபட்டுள்ளது.

இன்னும் கொஞ்சம் சண்டை போட்டு பார்த்துவிட்டு மூப்பனார் ஸ்டைலில் காங்கிரசும்ஜெயலலிதாவின் ஆர்டரை ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X