மனித உரிமைகள் பற்றி பேசும் வீரப்பனின் கூட்டாளி
தர்மபுரி:
சேலம் சிறையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாறன் புகார் கூறியுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை, தர்மபுரி,கோவை உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.
கடந்த 95ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தர்மபுரிநீதிமன்றத்தில் நேற்று மாறன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசிய மாறன் , சிறையில் சரியான உணவு வசதியில்லை, போதுமான படுக்கை வசதி இல்லை.மேலும், தனி அறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமையை மீறிய செயல். சிறையில் எனக்குப் போதுமானவசதிகள் செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாறனுக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதே போல் மாறனின் கூட்டாளிகளுக்கும்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications