For Daily Alerts
Just In
புதுவையில் கலாட்டா: 5 பேர் காயம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே வைத்திக்குப்பம் பகுதியில் சனிக்கிழமையன்று இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலை தவிர்க்க போலீசார் துப்பாக்கிச்சூடுநடத்தினர்.
மாசி மகத்தை ஒட்டி கடலில் நீராட வைத்திகுப்பம் மற்றும் சோலைநகர் மக்களிடையே வெள்ளிக்கிழமையனறு மாலை தகராறு ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மீண்டும் சனிக்கிழமையன்று காலை இரு பகுதி மக்களும் ஒருவருக்கொருவர்மோதிக்கொண்டதோடு கற்களை கொண்டு தாக்கினர்.
இதில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தை ஒடுக்க போலீஸார் வானை நோக்கிதுப்பாக்கியால் சுட்டனர்.
கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள இப்பகுதியில் தற்போது அமைதி நிலவுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தையடுத்துசனிக்கிழமையன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, March 10, 2001, 5:30 [IST]