For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க கூட்டணி குழப்பமிக்கது: திருநாவுக்கரசு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அ.தி.மு.க கூட்டணி, முற்றிலும் முரண்பாடான குழப்பமிக்க கூட்டணி. இதில் மூப்பனார் சேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது எனஎம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசுகூறியுள்ளதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைவிரைவில் துவங்க உள்ளது.

இதில் முனு ஆதி, ஆஸ்டின், ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போதுதொகுதியின் முக்கியத்துவம், கட்சியின் வளர்ச்சி, முக்கிய வேட்பாளர் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதிஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

கடந்த 1996ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் கூட்டணி சேருவதை எதிர்த்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசைத்துவக்கினார். ஆனால் இப்போது அ.தி.மு.க வுடன் காங்கிரசையும் சேர்த்துக் கூட்டணி வைத்துள்ளார்.

அவர் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. அந்தக் கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணிமட்டுமல்ல, முரண்பாடான கூட்டணியாகவும் உள்ளது.

தமிழகத்தில் ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு , புதுவையில் எதிரும் புதிருமாக மோதத் தயாராகி விட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், 5வது முறையாக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்பார்.ஆனால், எதிரணியில் யார் முதல்வர் என்று கூற முடியுமா?

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பாரதிய ஜனதாவை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றால்,நாங்களும் அதை ஏற்றுக் கொள்வோம் என்றார் திருநாவுக்கரசு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X