For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரருக்கு தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

உடுமலை அருகே போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரருக்கு 3ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் வேடபட்டி ரோடைச் சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கையா (35). இவர் மதுரைஆயுதப்படை பிரிவில் போலீஸ்கரராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் செய்த சில குற்றங்களுக்காகவிசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் சொந்த ஊரில் இருந்து வந்தார்.

கடந்த 1993ம் ஆண்டு உடுமலை மடத்துக் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார். அவர்களிடம் போலியான அடையாளஅட்டை, ஆவணங்களைக் காட்டி ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து மடத்துக் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கையா மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்தவழக்கை விசாரித்த உடுமலை மாஜிஸ்திரேட் திருநாவுக்கரசு, "" வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டசங்கையாவிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X