"கொலையானோர் பட்டியலுடன் திரிந்த மாணவர் கைது
கோவை:
கலவரத்தில் கொலையானவர்களின் பட்டியலுடன் திரிந்த அரபிக் கல்லூரி மாணவனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
கோவையில் கடந்த 97ம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையையடுத்து கோவையில் கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்த ஒரு டைரி மற்றும் பாடும் நிலா பாட்டுப் புத்தகத்துடன் திரிந்த ஒரு வாலிபரைப் போலீசார் கைதுசெய்தனர். உக்கடம் அரபிக் கல்லூரியில் படித்து வரும் இந்த மாணவனின் பெயர் அராபத் (18) என்பது தெரியவந்தது.
இந்த டைரியில் இந்த கொலைப் பட்டியலை ஏன் அந்த மாணவர் வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் என்றும், கோவையில் தங்கிப் படித்து வருகிறார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.