அதிமுக 141 தொகுதிகளில் போட்டி .. ஜெ. அறிவிப்பு
சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுமுழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக 141 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி அதிமுக 141 தொகுதிகளிலும், திருச்சி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமாகா, காங்கிரஸ்கட்சிகள் மொத்தமாக 47 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி 27 தொகுதிகளில் நிற்கிறது.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 8 இடங்களிலும், இந்திய தேசிய லீக், பார்வர்ட் பிளாக்,தமிழக முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன் கட்சி) ஆகியவை தலா 1 இடங்களில் போட்டியிடும் எனஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்ததால், தொகுதிப் பங்கீடு குறித்தஇறுதி அறிவிப்பு வெளியாக தாமதம் ஆனது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன்,மாநில செயலாளர் நல்லகண்ணுவிடம் தொலைபேசி மூலம் பேசினார். இதையடுத்து அதிமுக குழுவினர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினரைச் சந்தித்துப் பேசினர். அதன் முடிவில், உடன்பாடு ஏற்பட்டது.
அதிமுக கூட்டணியில், இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகுறித்து இந்த அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications