For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் ஆசை நிறைவேறாது..... கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராணுவ பேர ஊழல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி கொண்ட விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என கூறிய பிரதமர் வாஜ்பாயின் கருத்தை காங்கிரஸ்நிராகரித்திருப்பது குறித்து கருத்து தெரிவிக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

தெஹல்கா டாட் காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் பல அரசியில் தலைவர்களும்ராணுவ பேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக வீடியோ பட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைகுழு அமைக்கப்படும். விசாரணை 4 மாதங்களுக்குள் முடிந்து விடும். குற்றம்செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என வாஜ்பாய்வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின்போது கூறினார்.

பெங்களூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் வாஜ்பாயின் இந்தமுடிவை ஏற்க முடியாது. அவர் பதவி விலக வேண்டும் என மீண்டும் கூறியுள்ளது.

சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு குறிற்த பேச்சவார்த்தையில் ஈடுபட்டிருந்த கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் காரியகமிட்டி நிறைவேற்றி வெளியிட்ட தீர்மான அறிக்கையை நான் முழுவதும்படிக்கவில்லை. இந்நிலையில் நான் அது குறித்து கருத்து கூற முடியாது.

பலரும் ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேர்தலில் தே.ஜ.கூட்டணியின்வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வேண்டும் சிலர் என நினைக்கிறார்கள். அவர்கள் ஆசைநிறைவேறாது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X