For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பொருளாதாரம்: கவலைப்படுகிறார் முன்னாள் பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

இந்தியாவின் கடன் தொகை அதிகரித்து வருவதால், இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது என முன்னாள் பிரதமரும் சமாஜ்வாடிஜனதாக் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் கவலை தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டிற்கு ஓய்வெடுக்க வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பொருளாதாரம் முதல் அனைத்தும் தடமாறி நடக்கிறது. தாராளமயமாக்கல்கொள்கை, பெரும் அந்நிய நாட்டு முதலீட்டுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த முதலீட்டால் இந்தியாவில் தொழில்கள்தொடங்க வாய்ப்பு ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், அவ்வாறு இல்லாமல், எதிர்பார்த்த அளவிற்கும் குறைவான முதலீடுகளே கிடைத்தன. வேலை வாய்ப்பு உயரவில்லை. வெளிநாட்டுக்கம்பெனிகள் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டதே ஒழிய, அடிப்படைத் தொழில்கள் எதிலும் ஈடுபடவில்லை.

மத்திய அரசு மேலும், மேலும் கடன் பெற்று கடன் வலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் பூசல்கள், ஊழல்கள் அதிகரித்து விட்டன. இவற்றையெல்லாம் தீர்க்க அந்நிய நாட்டு ஆலோசனையைப் பெற வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டெஹல்கா.காம் கிளப்பிய ஆயுத பேர ஊழலை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் தேவையில்லை. சி.பி.ஐவிசாரணையே போதுமானது.

ஊழலை ஒழிக்க அனைத்து அரசியல்வாதிகளையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இந்த ஆலோசனைக்கு இப்போது எந்த அரசியல்வாதியும்தாயராக இல்லை. ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதிகள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்றார் சந்திரசேகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X