வன்முறையைத் தூண்ட பா.ம.க. சதி: விடுதலைச் சிறுத்தைகள் புகார்
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்ட பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை இரவு அண்ணா அறிவாலயத்தில், அவர் சந்தித்துப்பேசினார். முதல்வரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காரைக்காலில்நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பா.ம.க.வினர் கல்வீசித் தாக்கினர். வன்முறையைத் தூண்ட பா.ம.க. சதிசெய்கிறது.
தமிழக, புதுவை அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து, பா.ம.கவின் சதிச் செயலைத்தடுக்க வேண்டும்.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதல்வரிடம் கொடுத்துள்ளேன். தென் மாவட்டங்களிலும்போட்டியிடும் வகையில் தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளோம். புதுவையில் 5 இடங்கள் தருமாறுகோரியுள்ளோம் என்றார் திருமாவளவன்.