For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜி.எஸ்.எல்.வி.: மார்ச் இறுதியில் விண்ணில் பாயும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

1500 கிலோ எடை உள்ள தொலைதொடர்பு செயற்கோளை விண்ணில் செலுத்தக்கூடிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் (ஜியோ ஸ்டேசனரி லாஞ்சிங் வெகிக்கிள்)இம்மாத இறுதியில் ஏவப்பட இருக்கிறது. இந்த ராக்கெட் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவில் இருந்து பெறப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின்கள் இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 3ம்தேதிக்குள் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் இந்திய விண்வெளித்துறை வடிவமைத்தது ஆகும்.

இதுவரை தனது தொலைத்தொடர்பு செயற்கைகோள்களை வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் ஏவி வந்தது இந்தியா. தற்போது முதல் முறையாகஇந்திய ராக்கெட் மூலம் ஏவுகிறது.

இந்தியாவின் தொலை உணர்வு செயற்கை கோளை எடுத்துச் சென்ற பி.எஸ்.எல்.வி. ராக்கெட் கடந்த 1999ம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது.அதன் பிறகு தற்போது மற்றொரு மைல்கல்லை கடக்க இருக்கிறது இந்திய விண்வெளித்துறை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X