For Daily Alerts
Just In
வீரப்பன்: அதிரடிப்படைத் தலைவர் மாற்றம்
சென்னை:
சந்தன வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படைத் தலைவராக ஐ.ஜி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு அதிரடிப்படைத் தலைவராக இதுவரை ஐ.ஜி. பாலச்சந்திரன் இருந்து வந்தார். அவர் தற்போது செயலாக்கப்பிரிவு ஐ.ஜியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்குப் பதில் தற்போது செயலாக்கப் பிரிவு ஐஜியாக உள்ளராதாகிருஷ்ணன் புதிய அதிரடிப்படைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டிலிருந்து ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, March 20, 2001, 5:30 [IST]